தமிழ்த்துறை(தன்னிதிப்பிரிவு)
- Home
- Index
தமிழ் இலக்கியம் தன்னிதிப்பிரிவு வரலாறு
2011-2012 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை தன்னிதிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவியருக்குத் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக பாடத்திட்டங்களை வரையறுத்து அதன் வாயிலாக சவால்கள் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ள தரமானகல்வியைப் போதிப்பதோடு போட்டித்தேர்வுகளுக்கு மாணவியரை ஆயத்தப்படுத்துவதிலும் அறச்சிந்தனையுடன் கூடிய ஆன்மீக உணர்வை ஊட்டி சிறந்த பெண்மணிகளாக உருவாக்குவதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
நோக்கம்
தாய்மொழியாம் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பதால் மொழியைக் கையாளுகின்ற இலக்கண அறிவையும், தமிழின் இலக்கியப் பரப்பினையும் வளங்களையும் மாணவியர் அறிந்துகொண்டு, படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கி தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய இயலும். தமிழக அரசு தமிழ் கற்றவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் அளிப்பதால் வேலைவாய்ப்புப் பெற இது ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இன்றைய ஊடகங்களில் நல்ல தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் திறமையானவர்கள் தேவைப்படுவதால் படைப்புக்கலை,விளம்பரக்கலை, பேச்சுக்கலையில் சிறந்த தகுதியான மாணவியரை உருவாக்க ஆறு பருவங்களிலுமுள்ள பாடத்திட்டங்கள் பயன்படும்.
குறிக்கோள்
மாணவர்களின் பன்முக ஆளுமையை வளர்த்தெடுத்தல்
உயர்தர கல்வி முறைகளின் வழியே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தல்
மாணவர்களின் தனித்தன்மையையும் வேறுபட்ட சிந்தனைகளையும் ஊக்குவித்தல்.
பாடப்பகுதிகளின் வழியே சமூக மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துதல்
கருத்தரங்கம்
1. 25-09-2015, தமிழ் இலக்கியங்களில் முத்தமிழ் வளங்கள்; தேசிய கருத்தரங்கம்.
2. 21-09-2016 ,பன்னோக்கு பார்வையில் காப்பியங்கள் ; தேசிய கருத்தரங்கம்.
3. 13-12-2017, பன்னோக்கு பார்வையில் சமய இலக்கியங்கள்: தேசிய கருத்தரங்கம்.
4. 13-08-2018, நவீன இலக்கியங்களில் மகடூ முன்னிலை,பன்னாட்டுக் கருத்தரங்கம்;
பல்கலைக்கழக அளவிலான திருக்குறள் போட்டி
பயிலரங்கம்
முன்னிலைப்படுத்தல்
மாணவர்கள்
ஆசிரியர்கள்